Free Online FOOD for MIND & HUNGER - DO GOOD 😊 PURIFY MIND.To live like free birds 🐦 🦢 🦅 grow fruits 🍍 🍊 🥑 🥭 🍇 🍌 🍎 🍉 🍒 🍑 🥝 vegetables 🥦 🥕 🥗 🥬 🥔 🍆 🥜 🎃 🫑 🍅🍜 🧅 🍄 🍝 🥗 🥒 🌽 🍏 🫑 🌳 🍓 🍊 🥥 🌵 🍈 🌰 🇧🇧 🫐 🍅 🍐 🫒Plants 🌱in pots 🪴 along with Meditative Mindful Swimming 🏊‍♂️ to Attain NIBBĀNA the Eternal Bliss.
Kushinara NIBBĀNA Bhumi Pagoda White Home, Puniya Bhumi Bengaluru, Prabuddha Bharat International.
Categories:
  • General
  • Theravada Tipitaka
  • Plant raw Vegan Broccoli, peppers, cucumbers, carrots

Archives:
  • January 2023
  • December 2022
  • November 2022
  • October 2022
  • September 2022
  • August 2022
  • July 2022
  • June 2022
  • May 2022
  • April 2022
  • March 2022
  • February 2022
  • January 2022
  • December 2021
  • November 2021
  • October 2021
  • September 2021
  • August 2021
  • July 2021
  • June 2021
  • May 2021
  • April 2021
  • March 2021
  • February 2021
  • January 2021
  • December 2020
  • November 2020
  • October 2020
  • September 2020
  • August 2020
  • July 2020
  • June 2020
  • May 2020
  • April 2020
  • March 2020
  • February 2020
  • January 2020
  • December 2019
  • November 2019
  • October 2019
  • September 2019
  • August 2019
  • July 2019
  • June 2019
  • May 2019
  • April 2019
  • March 2019
  • February 2019
  • January 2019
  • December 2018
  • November 2018
  • October 2018
  • September 2018
  • August 2018
  • July 2018
  • June 2018
  • May 2018
  • April 2018
  • March 2018
  • February 2018
  • January 2018
  • December 2017
  • November 2017
  • October 2017
  • September 2017
  • August 2017
  • July 2017
  • June 2017
  • May 2017
  • April 2017
  • March 2017
  • February 2017
  • January 2017
  • December 2016
  • November 2016
  • October 2016
  • September 2016
  • August 2016
  • July 2016
  • June 2016
  • May 2016
  • April 2016
  • March 2016
  • February 2016
  • January 2016
  • December 2015
  • November 2015
  • October 2015
  • September 2015
  • August 2015
  • July 2015
  • June 2015
  • May 2015
  • April 2015
  • March 2015
  • February 2015
  • January 2015
  • December 2014
  • November 2014
  • October 2014
  • September 2014
  • August 2014
  • July 2014
  • June 2014
  • May 2014
  • April 2014
  • March 2014
  • February 2014
  • January 2014
  • December 2013
  • November 2013
  • October 2013
  • September 2013
  • August 2013
  • July 2013
  • June 2013
  • May 2013
  • April 2013
  • March 2013
  • February 2013
  • January 2013
  • December 2012
  • November 2012
  • October 2012
  • September 2012
  • August 2012
  • July 2012
  • June 2012
  • May 2012
  • April 2012
  • March 2012
  • February 2012
  • January 2012
  • December 2011
  • November 2011
  • October 2011
  • September 2011
  • August 2011
  • July 2011
  • June 2011
  • May 2011
  • April 2011
  • March 2011
  • February 2011
  • January 2011
  • December 2010
  • November 2010
  • October 2010
  • September 2010
  • August 2010
  • July 2010
  • June 2010
  • May 2010
  • April 2010
  • March 2010
  • February 2010
  • January 2010
  • December 2009
  • November 2009
  • October 2009
  • September 2009
  • August 2009
  • July 2009
  • June 2009
  • May 2009
  • April 2009
  • March 2009
  • February 2009
  • January 2009
  • December 2008
  • November 2008
  • October 2008
  • September 2008
  • August 2008
  • July 2008
  • June 2008
  • May 2008
  • April 2008
  • March 2008
  • January 2008
  • December 2007
  • November 2007
  • October 2007
  • September 2007
  • August 2007
  • July 2007
Meta:
  • Login
  • Podcasts
  • RSS
  • Comments RSS
June 2025
M T W T F S S
« Jan    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
07/24/20
கௌதம புத்தர்
Filed under: General
Posted by: site admin @ 7:40 am

https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8C%E0%AE%A4%E0%AE%AE_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D


கௌதம புத்தர்

https://ta.wikipedia.org/s/58x


கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Jump to navigation
Jump to search

சித்தார்த்த கௌதம புத்தர்
Siddhārtha Gautama Buddha
Buddha in Sarnath Museum (Dhammajak Mutra).jpg
கிபி 4ம் நூற்றாண்டின் புத்தர் சிலை - அரசு அருங்காட்சியகம், சாரநாத்
பிறப்பு கிமு 563 அல்லது 480[1][2]
லும்பினி, நேபாளம்
இறப்பு கிமு 483 அல்லது 400(வயது 80)
குசிநகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
அறியப்படுவது பௌத்த சமயத்தை உருவாக்கியவராவார்
முன்னிருந்தவர் காசாபா புத்தர்
பின் வந்தவர் மைத்ரேயா புத்தர்
பெற்றோர் சுத்தோதனர் – மாயா
வாழ்க்கைத்
துணை
யசோதரை
பிள்ளைகள் ராகுலன்

கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. இவர் கி.மு 563க்கும் கி.மு 483க்கும்
இடையில் வாழ்ந்தவர். கௌதமபுத்தர் கிறித்து பிறப்பதற்கு ஆறு
நூற்றாண்டுகளுக்கு முன்பே வாழ்ந்திருக்கலாம் என்ற நம்பிக்கையை
உறுதிப்படுத்தக்கூடிய, ஒரு பழமையான பௌத்த வழிபாட்டுத் தலத்தை தாம்
கண்டறிந்துள்ளதாக நேபாளத்தில் உள்ள அகழ்வாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.[1][2]
பிறக்கும் போது இவருக்கிடப்பட்ட பெயர் “சித்தார்த்த கௌதமர்” என்பதாகும். பின்னர் இவர் ஞானம் பெற்று புத்தர் (ஞானம் பெற்றவர்) ஆனார். இவர் “சாக்கிய முனி” என்றும் அழைக்கப்பட்டார்.[3]

புத்த சமயத்தின் மிகவும் முக்கியமானவரென்ற வகையில், கௌதமருடைய
வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும், துறவிமட விதிகளையுமே, கௌதமரின்
மறைவுக்குப்பின், சுருக்கி பௌத்த பிக்குகள் மனனம் செய்துவந்தார்கள். அவற்றுள் மிக முக்கியமானதாக தம்மபதம்
விளங்குகிறது, பிற மத நூல்களைப் போன்று அல்லாமல் இந்நூல் மக்களின் சாதாரண
பேச்சு வழக்கில் உருவாக்கப்பட்டது. மேலும் எளிய நடை இதன் சிறப்பம்சம்
ஆகும். குரு - சீட பரம்பரையூடாக வாய்மொழி மூலம் கடத்தப்பட்டுவந்த இத் தகவல்கள், 100 வருடங்களுக்குப் பின்னர் திரிபிடகம் என்று வழங்கப்படும் நூலாக எழுத்துவடிவம் பெற்றது.

பொருளடக்கம்

  • 1 புத்தரின் வரலாறு

    • 1.1 பெயர் விளக்கம்
  • 2 வரலாற்று ரீதியான சித்தார்த்த கௌதமர்
    • 2.1 வரலாற்றுச் சூழல்
  • 3 குடும்பம்
  • 4 புத்தரின் கூற்றுக்கள்
    • 4.1 புத்தரின் கொள்கைகள்
    • 4.2 புத்தரின் சீடர்கள்
    • 4.3 புத்தரும் பிற மதங்களும்
  • 5 புத்தரின் மற்ற பெயர்கள்
    • 5.1 ததாகதர்
    • 5.2 பதந்தர்
  • 6 மற்ற மதங்களில் புத்தர்
  • 7 இந்திய புத்தர் கோயில்கள்
  • 8 இதனையும் காண்க
  • 9 மேற்கோள்கள்
  • 10 துணை நூற்கள்
  • 11 வெளி இணைப்புகள்

புத்தரின் வரலாறு

மாயாதேவி கோயில், லும்பினி, நேபாளம்

சித்தார்த்த கௌதமர், இன்றைய நேபாளத்திலுள்ள, லும்பினி என்னுமிடத்தில், மே மாதத்துப் பூரணை தினத்தில் பிறந்தார். மாயா இவரது தாயார்.
இவரின் பிறப்புக் கொண்டாட்டத்தின் போது சமுகந்தந்த ஞானியொருவர்,
சித்தார்த்தர் ஒரு பெரிய அரசனாக அல்லது ஒரு ஞானியாக வருவாரென்று எதிர்வு
கூறினார். இவர் பிறப்பதற்கு முன்னரே இவரது தாயாரின் கனவில் ஒரு வெள்ளை யானை
மீது தான் பயணிப்பதாகவும், அதில் வெள்ளைத் தாமரை சுமந்து செல்வதாகவும்
கனவில் தோன்றியது. கௌதமர் பிறந்த ஏழாவது நாளே அவரது அன்னை இறந்தார். எனவே
இவரை இவரது தாயின் தங்கையும், சிற்றனையுமான மகாபிரஜாபதி கௌதமி வளர்த்தார்.

சித்தார்த்தர், தனது 16வது வயதில் யசோதரையை மணந்தார். பிறகு இருவரும் ஒரு ஆண் மகனைப் பெற்றெடுத்தனர். அவனது பெயர் ராகுலன்.
சித்தார்த்தருக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் அவர் தந்தை ஏற்படுத்தித்
தந்தார். வெளியுலகைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அரண்மனை வசதிகளை
அனுபவிப்பதிலேயே தன் நேரத்தை செலவிட்டார் சித்தார்த்தர்.

அவரது 29 ஆவது வயதில் தனது வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும் தருணம் வாய்க்கப் பெற்றார். ஒருமுறை உதவியாளரொருவருடன் வெளியே சென்றபோது, நான்கு காட்சிகளைக் காண நேர்ந்தது. அவை;


  1. ஒரு வயதான தள்ளாடும் கிழவர்
  2. ஒரு நோயாளி
  3. அழுகிக் கொண்டிருந்த ஒரு பிணம்
  4. நாலாவதாக ஒரு முனிவன்

இக்காட்சிகளினூடாக மனித வாழ்க்கையின் துன்பங்களை முதன் முதலில்
உணர்ந்துகொண்ட சித்தார்த்தர், வாழ்வின் இரகசியத்தைக் காண கானகம் நோக்கிப்
பயணித்தார். அவர் துறவறம் பூணவில்லை, மாறாக வாழ்வின் ரகசியத்தைக் காண்பதே
அவரின் நோக்கம்.

கானகம் நோக்கிச் சென்ற சித்தார்த்தர், அப்போதைய வழக்கப்படி பட்டினி கிடந்து பல நாட்கள் குளிக்காமல் யோக நெறியில் தவத்தில் அமர்ந்தார். இவரின் தவத்தைக் கண்டு சில சீடர்கள் அவருக்குக் கிடைத்தனர்.

வாரணாசி அருகே உள்ள சாரநாத்
எனும் இடத்தில் முதன் முறையாக ஐவரைச் சீடர்களாக ஏற்றுக்கொண்டு அவர்கட்கு
நல்லறம் புகட்டினார். இந்நிகழ்ச்சி தம்மச் சக்கரப் பிரவாத்தனம் அல்லது
அறவாழி உருட்டுதல் என புத்தச் சமய நூல்களில் அழைக்கப்படும்.

பலநாட்கள் கழித்து ஒரு இசைக்கலைஞன் அவர் தவம் புரிந்து கொண்டு
இருந்த வழியாகச் சென்ற போது, தனது சீடனிடம் யாழ் பற்றியும் அதன் நுணுக்கம்
பற்றியும் கூறிச் சென்றான். “ஒரு நாணை யாழில் இணைக்கும் பொழுது அதை அதிகமாக
இழுத்துக் கட்டினால் நாண் அறுந்து விடும் என்றும், மிகத் தளர்வாகக்
கட்டினால் இசை மீட்ட முடியாது என்றும் கூறிக் கொண்டு சென்றான்”.
சித்தார்த்தாவின் அறிவு அப்போது வேலை செய்ய ஆரம்பித்தது. தனது கடந்த
காலத்தில் போதையிலும், பெண் போகத்திலும், செல்வச் செழிப்பிலும் வாழ்ந்த
தான் இப்போது அதற்கு மிக மாறாக தன்னை வருத்திக் கொண்டு இருக்கிறேன்
என்றும், இதே நிலை நீடிக்குமானால் தனது உடல் இறந்து விடும் என்றும்; தான்
தேடி வந்த ஞானம் அடையும் முன்னமே தான் இறந்து விடுவோம் என்றும் உணர்ந்தார்.
எனவே கடுந்தவம் இருப்பதைக் கைவிட எண்ணினார். எனவே அதிக போக வாழ்க்கை,
ஞானத்தினைக் கொண்டுவராது என்றும், மிக நெடிய தவமும் ஞானத்தினைக் கொண்டு
வராது என்றும், நெடிய தவம் இருந்தால் இவ்வுடல் அழிந்து விடும் என்றும்
யோசிக்கத் தொடங்கினார்.

எனவே முதன் முறையாக அவர் அருகே இருந்த ஆற்றில் சென்று குளிக்க
வேண்டுமென முடிவு செய்தார். ஆற்றில் இறங்கும் பொழுது அந்த ஆற்றின்
இழுப்பைக் தன்னால் ஈடு கொடுக்க முடியாமையை உணர்ந்தார். அவ்வாறு ஆற்றில்
குளித்து விட்டு வரும் பொழுது, அங்கே இருந்த ஒரு மாடு மேய்க்கும் சிறுமி
இவரின் நிலையைக் கண்டு தான் கொண்டு வந்த சோற்றை அவருக்கு ஊட்டி விட்டார்.

தனது 35ஆம் வயதில், இந்தியாவின் தற்போதைய பீகார் மாநிலத்தில் உள்ள கயை எனும் இடத்தில் சுஜாதை என்பவளிடம் மோர் வாங்கிக் குடித்துவிட்டு போதி மரத்தினடியில்
அமர்ந்த சித்தார்த்தர், ஞான நிலை அடையும் வரை அந்த இடத்தை விட்டு
எழுந்திராமல் நிகழ்வுகளைக் கவனிப்பது என தீர்மானித்தார். ஒரு வாரம் தனது
மிக நுண்ணிய கவனிப்பின் பலனாக முதன் முறையாகக் கவலைக்கும்,
துன்பத்திற்குமான காரணம் பற்றியும், தான் முதன் முறையாக மிக மகிழ்ச்சியாக
அப்போது இருப்பதையும் உணர்ந்தார். புரிந்துணர்வே ஞானத்தின் அடிக்கல் என்பதை
உணர்ந்தார்.

இந்நிலையே ததாகதர் நிலை என்று (அதாவது ‘எது உண்மையில் அதுவாக உள்ளதோ அந்த நிலையை உணர்ந்து கொண்டார்.[4] புத்தர் ஞானம் பெற்ற அவ்விடம் இன்று புத்தகயா என்று புத்த மதத்தினரின் யாத்திரைத் தலமாக விளங்குகிறது.

அவரது வாழ்க்கையின் அடுத்த 45 ஆண்டுகளில் பலர் அவரைப் பின்பற்றி அவரது சீடர்கள் ஆயினர்.[5]



புத்தரின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவச் சிற்பங்கள்
  • மாயாதேவியின் கனவுச் சிற்பம், பர்குட், கிமு 150

  • மாயாதேவியின் கனவுச் சிற்பம், கந்தகார், கிரேக்க-பௌத்த கலைச் சிற்பங்கள், கிமு 2ம் நூற்றாண்டு

  • புத்தரின் பிறப்பு

  • குழந்தை புத்தரைக் குளிப்பாட்டும் காட்சி, கிமு 2ம் நூற்றாண்டு

  • எழு நடை எடுத்து வைக்கும் குழந்தை கௌதம புத்தர், கந்தகார்



பெயர் விளக்கம்

சித்தார்த்தர், மெய்ஞானம் பெற்றது “புத்தர்” அல்லது ஒளிபெற்றவர் என்றும் “ததாகதர்” (உண்மையை
அறிந்தவர்) என்றும், சாக்கிய முனி அல்லது சாக்கிய வம்சத்து முனிவர் என்றும் பல பெயர்களால் அழைக்கப்பட்டார்.

“புத்தன்”
என்ற சொல்லுக்கு “விழித்தெழுந்தவன்”, “ஒளியினைக் கண்டவன்” என்று பொருள்
ஆகும். தன் ஆசையையும், அகந்தையையும் புத்தர் வெற்றி கொண்டார். “தான்”,
“தனது” என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே “விடுதலை” அல்லது “நிர்வாண
நிலை” என்றுரைப்பர்.



வரலாற்று ரீதியான சித்தார்த்த கௌதமர்

புத்தரின்
வாழ்க்கையின் வரலாற்று உண்மைகள் குறித்து தகுதியற்ற கூற்றுக்களைக் கூற
அறிஞர்கள் தயங்குகிறார்கள். பெரும்பாலானவர்கள் புத்தர் வாழ்ந்து,
பயிற்றுவித்து, மகாஜனபத சகாப்தத்தின் போது பிம்பிசாரரின் (அண். 558 – அண். 491 BCE, அல்லது அண். கி. மு. 400) ஆட்சியின் போது துறவற ஒழுங்கை நிறுவினார் என்பதை ஒத்துக் கொள்கின்றனர்.[6][7][8] பிம்பிசாரர் மகத நாட்டின் ஆட்சியாளர் ஆவார். அஜாதசத்ருவின் ஆட்சியின் ஆரம்ப காலங்களின் போது புத்தர் இறந்தார். அஜாதசத்ரு பிம்பிசாரருக்கு பிறகு ஆட்சிக்கு வந்தார். இவ்வாறாக சமண தீர்த்தங்கரரான மகாவீரருக்குப் பிந்தைய காலத்தில் புத்தர் வாழ்ந்தார்.[9][10]
“பிறப்பு, முதிர்ச்சி, துறவு, தேடல், விழிப்புணர்வு மற்றும் விடுதலை,
கற்பித்தல், இறப்பு” ஆகியவற்றின் பொதுவான வரிசை பரவலாக
ஏற்றுக்கொள்ளப்பட்டாலும்,[11] பாரம்பரிய சுயசரிதைகளில் உள்ள பல விவரங்களின் உண்மைத்தன்மை பற்றி குறைவான அளவே ஒருமித்த கருத்து உள்ளது.[12][13]

கௌதமரின் பிறப்பு மற்றும் இறப்பு ஆகிய காலங்கள் பற்றி நிச்சயமற்ற
தன்மை நிலவுகிறது. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தின் போது பெரும்பாலான
வரலாற்றாளர்கள் கௌதமரின் வாழ்க்கையை அண். கி. மு. 563 முதல் கி. மு. 483
வரை என்று வரையறுத்தனர்.[14][15]
தற்போது சிறிது காலத்திற்கு முன்னர் இவரது இறப்பு பிந்தைய நாட்களில் கி.
மு. 411 மற்றும் கி. மு. 400க்கு இடையில் நிகழ்ந்தது என குறிப்பிடப்பட்டது.
1988 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் இந்த கேள்வி கேட்கப்பட்ட
போது,[16][17][18]
பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் கி. மு. 400 க்கு 20 வருடங்கள்
முன்னர் அல்லது பின்னர் ஆகிய ஆண்டுகளில் புத்தர் இறந்திருக்கலாம் என்று
அறுதியிட்டு கூறினர்.[14][19][note 1] எவ்வாறாயினும், இந்த மாற்று காலவரிசைகளை அனைத்து வரலாற்றாசிரியர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.[24][25][note 2]



வரலாற்றுச் சூழல்

புத்தரின் (அண். கி. மு. 500) காலத்தின் போது இந்தியாவின் பண்டைய ராஜ்யங்கள் மற்றும் நகரங்கள்.

ஆரம்ப கால நூல்களில் உள்ள ஆதாரங்களின்படி சித்தார்த்த கௌதமர் சாக்ய
இனத்தில் பிறந்தார். இந்த இனம் புவியியல் ரீதியாகவும் கலாச்சார
ரீதியாகவும் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் கிழக்கு இந்திய துணைக்கண்டத்தில்
இருந்தது.[30] இவரது பொதுவான பெயர் “சகமுனி” அல்லது “சாக்யமுனி” (”சாக்கியர்களின் முனிவர்”). அது ஒரு சிறிய குடியரசு அல்லது தன்னல குழுவாக இருந்தது. இவரது தந்தை தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் அல்லது தன்னல குழுவின் தலைவராக இருந்தார்.[30] புத்த மத பாரம்பரியத்தின் படி கௌதமர் லும்பினி என்ற இடத்தில் பிறந்தார். அந்த இடம் தற்கால நேபாளத்தில் உள்ளது. சாக்ய தலைநகரான கபிலவஸ்துவில் வளர்க்கப்பட்டார். கபிலவஸ்துஎன்பது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட் அல்லது இந்தியாவில் உள்ள பிப்ரவா என கூறப்படுகிறது.


  • வார்டர் என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: “புத்தர் […]
    சாக்ய குடியரசில் பிறந்தார். அது கபிலவஸ்துவின் நகர அரசு ஆகும். அது வட
    இந்திய எல்லைக்கு அப்பால் தற்கால நேபாள எல்லைக்குள் இருந்த ஒரு மிகச்சிறிய
    அரசு ஆகும்”.[31]
  • வால்ஷே என்ற வரலாற்றாளர் பின்வருமாறு கூறுகிறார்: “இமயமலைகளின்
    ஓரத்தில் வாழ்ந்த சாக்ய இனத்தை சேர்ந்தவர் புத்தர். இவரது உண்மையான பிறந்த
    இடம் நேபாளத்தில் வட இந்திய எல்லைக்கு சில மைல்கள் வடக்கே அமைந்துள்ளது.
    இவரது தந்தை உண்மையில் அரசர் கிடையாது. மாறாக, இனத்தின்
    தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆவார். பிற்காலத்தில் இவரது தந்தை அரசர் என்று
    புனையப்பட்டது. அவரும் ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தார். ஆனால்
    ராஜா என்ற பட்டத்தை கொண்டிருந்தவர்கள் பகுதி அளவிற்கே அரசருக்கு
    ஒப்பானவர்கள் ஆவர். அந்த நேரத்தில் வட இந்தியாவில் இருந்த சில அரசுகள்
    ராச்சியங்களாகவும் மற்றவை குடியரசுகளாகவும் இருந்தன. சாக்ய குடியரசானது
    தெற்கே இருந்த கோசலை அரசின் சக்தி வாய்ந்த அரசருக்கு கட்டுப்பட்டு
    இருந்தது”.[32]
  • பண்டைய கபிலவஸ்து அமைந்திருந்த உண்மையான இடம் எது என்று தெரியவில்லை.[33] அது வட இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் உள்ள பிப்ரவா,[34][35][36] அல்லது தற்கால நேபாளத்தில் உள்ள திலௌராகோட்டாக இருக்கலாம்.[37][38][33] இந்த இரண்டு நகரங்களும் ஒன்றுக்கொன்று 15 மைல் தொலைவில்தான் அமைந்துள்ளன.[38]


குடும்பம்

முதன்மைக் கட்டுரை: கௌதம புத்தரின் குடும்பம்

கபிலவஸ்துவின் மன்னர் சுத்தோதனர் - மாயா தேவிக்கும் பிறந்த கௌதம புத்தரின் இயற்பெயர் சித்தார்த்தர் ஆகும். புத்தர் பிறந்த ஏழு நாளில் மாயாதேவி இறந்ததால், சிற்றன்னை மகாபிரஜாபதி கௌதமி புத்தரை வளர்த்தார்.[39] சித்தார்த்தர் யசோதரையை மணந்து ராகுலன் என்ற மகனை பெற்றெடுத்தார். புத்தரின் சிற்றன்னையான மகாபிரஜாபதி கௌதமியின் மகன் நந்தன், மகள் நந்தா ஆவார். மற்ற பிற நெருங்கிய உறவினர்கள் ஆனந்தர், தேவதத்தன் ஆவார்.



புத்தரின் கூற்றுக்கள்

புத்தர்
என்றுமே தன்னை ஒரு தேவன் என்றோ, கடவுளின் [அவதாரம்] என்றோ
கூறிக்கொண்டதில்லை. தான் புத்த நிலையை அடைந்த ஒரு மனிதன் என்பதையும்,
புவியில் பிறந்த மானிடர் அனைவருமே இந்த புத்த நிலையை அடைய முடியும்
என்பதையும் தெளிவாக வலியுறுத்தினார். ஆசையே துன்பத்தின் அடிப்படை என அவர் கூறினார். மேலும் புத்தர், ஆத்மாவைப் புறந்தள்ளி, அநாத்மா என்ற உடல் மற்றும் உலகத்திற்கு அதிகம் பொருள் தருகிறார். மேலும் வேதங்களையும், கடவுள் இருப்பையும் மறுக்காமல், அது குறித்து பேசாது விட்டார்.



புத்தரின் கொள்கைகள்

காந்தார நாட்டுச் சிற்பம்கௌதம புத்தரின் மகாபரிநிர்வாணத்தை விளக்கும் காந்தார நாட்டுச் சிற்பம், காலம் 2-3-ஆம் நூற்றாண்டு

கௌதம புத்தர், வாரணாசியின் அருகிலுள்ள சாரநாத் என்னுமிடத்திலுள்ள “மான் பூங்கா”வில் தன் கொள்கையை போதிக்கத் தொடங்கினார். 45 ஆண்டுகள் காசி, கோசலம், மகதம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளின் மக்களுக்கும், அரசப் பெருமக்களுக்கும் தாம் கண்ட பேருண்மையை ஊர் ஊராகச் சென்று பரப்பினார். இராஜகிரகத்தில் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது போதனைகளை எடுத்துரைத்து வெற்றிகண்டார்.

கபிலவஸ்துவில் தன் மகன் ராகுலன் மற்றும் சிற்றனை மகாபிரஜாபதி கௌதமி ஆகியோரை சங்கத்தில் இணைத்துக் கொண்டார். மகத நாட்டு மன்னர்களான பிம்பிசாரன், அஜாதசத்ரு ஆகியோர்களைப் பௌத்த சமயத்தைத் தழுவும்படி பணித்தார். கோசல நாட்டிற்கும் சென்று பலரை பௌத்தத்தைப் பின்பற்றிட வழிகோலினார்.

இந்த இடங்களிலெல்லாம் புத்தர் அவருடைய நான்கு உண்மைகளையும், “நான்கு அதிசய சத்தியங்களையும்”, பஞ்ச சீலங்களையும் மற்றும் “எண்வகை மார்க்கங்களையும்” பின்பற்றி வாழும்படி கூறினார். பௌத்த இல்லறத்தார்களான உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய அறங்களை கூறினார்ர். பிறகு தனது 80-வது வயதில்,குசி நகரத்தில் கி.மு. 483-ல் பரிநிர்வாணம்
அடைந்தார். குசி நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவருடைய உடலுக்கு இறுதிக் கடன்
ஆற்றினர். எரியூட்டப்பட்டு எஞ்சிய இவரது சாம்பலும் எலும்பும் எண்வகைப்
பகுதிகளாக்கப்பட்டு எட்டு ஊர்களில் புதைக்கப்பட்டு,பின் அவற்றின் மீது சைத்தியங்கள் எழுப்பப்பட்டன.

துறவிகளாகிய பிக்குகளும் பிக்குணிகளும் பின்பற்றி ஒழுக வேண்டிய நெறிமுறைகளை வகுத்துத் தந்ததோடு அவர்களுக்கென பிக்குகளின் சங்கத்தையும் உருவாக்கினார். அரசர்களும் நில பிரபுக்களும் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தங்குவதற்கு விகாரைகள் மற்றும் குடைவரைகள் அமைத்துக்கொடுத்து நிலபுலங்களைத் தானம் தந்தனர். பௌதத சமய உபாசகர்கள் கடைபிடிக்க வேண்டிய பஞ்ச சீலங்கள்

கி.மு. 3-ம் நூற்றாண்டு வட இந்தியா,
கிழக்கிந்தியா, ஸ்ரீலங்கா ஆகிய இடங்களில் புத்த மதம் பரவியது.
கி.பி.முதலாம் நூற்றாண்டில் புத்தமதம் கிழக்கு நாடுகளுக்கு பரவியது. கி.பி.
7-ம் நூற்றாண்டில் திபெத்திற்குச் சென்றது. இதற்கு அசோகர், கனிஷ்கர் முதலானோர் பேருதவிப் புரிந்தனர்.



புத்தரின் சீடர்கள்

முதன்மைக் கட்டுரை: புத்தரின் சீடர்கள்

புத்தருக்கு ஆயிரக்கணக்கான சீடர்கள் இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் சாரிபுத்திரர், மௌத்கல்யாயனர்,
மகாகாசியபர், சுபூதி, பூரணர், காத்தியாயனர், அனுருத்தர், உபாலி, ராகுலன், ஆனந்தர்
மற்றும் மகதநாட்டின் அரசர் பிம்பிசாரரும், கோசலத்தின் அரசர் பிரசேனஜித்
என்கிற பசேனதியும் இவருடைய சீடர்களாக இருந்து பௌத்த சமயம் பரவ அடிகோலினர்.
பெண் சீடர்களில் மகாபிரஜாபதி கௌதமி தலைமையானவர்.



புத்தரும் பிற மதங்களும்

சமணமும் பௌத்தமும் சமகாலத்தவை.பல்வேறு மதங்கள் புத்தர் காலத்தில் இருந்துவந்தாலும் அவற்றுள் குறிப்பிடத்தக்கவை:சைனம்(சமணம்), ஆசீவகம், வைதீகம் (பிராமணம்) ஆகியவை.

மேலும்,இவரது கால கட்டத்தில் இந்திய மெய்யியல் தத்துவங்களில் ஆதிக்கம் செலுத்தி வந்த பிரம்மம், ஆத்மா, அநாத்மா
போன்ற கருத்துகளை அறிவார்த்த முறையில் களைந்து உலகம், வாழ்க்கை, சிந்தனை
குறித்து முற்றிலும் வேறுபட்ட கருத்துகளை முதன் முதலில் எடுத்துரைத்தவர்
புத்தர் ஆவார்.



புத்தரின் மற்ற பெயர்கள்

ததாகதர்

சமசுகிருத மொழியில் கௌதம புத்தரை ததாகதர் என்று அழைப்பர். ததாகதர் எனும் சமஸ்கிருதச் சொல் தத ஆகத என்ற சொற்களின் சந்தியினால் தோன்றும் சொல். “அவ்வாறு சென்றவர்” என்று பொருள் படும். இது கௌதம புத்தரை குறிக்கும் காரணப்பெயர். புத்தர் பிறவிச்சுழற்சியை கடந்து சென்றவர் என்ற காரணத்தைக்கொண்டு இப்பெயர் அவருக்கு சூட்டப்பட்டது.



பதந்தர்

மற்ற மதங்களில் புத்தர்

பாகவதத்தில் புத்தரை விஷ்ணுவின் 9வது அவதாரமாக போற்றுகிறது.[40]



இந்திய புத்தர் கோயில்கள்

முதன்மைக் கட்டுரை: புத்தக் கோவில்களின் பட்டியல்

இந்தியாவில் புத்தருக்கு பல கோயில்கள் இருப்பினும், புத்தர் ஞானம் அடைந்த, பிகார் மாநிலத்தின் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயில், பன்னாட்டு பௌத்தர்களுக்கு தலைமைக் கோயிலாக திகழ்கிறது.

குசிநகரில் பரிநிர்வாணம் அடைந்த கௌதம புத்தர் சிற்பம்



இதனையும் காண்க

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
கௌதம புத்தர்
என்பதின் ஊடகங்கள் உள்ளன.

  • புத்தர்
  • பௌத்த யாத்திரைத் தலங்கள்
  • புத்தக் கோயில்கள்
  • போதிசத்துவர்
  • ததாகதர்


மேற்கோள்கள்





  1. ஸ்ரீமத் பாகவதம்


துணை நூற்கள்

  • பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399
  • பௌத்தமும் தமிழும்,மயிலை சீனி.வேங்கடசாமி,2007, பாவை பப்ளிகேஷன்ஸ்,இராயப்பேட்டை, சென்னை-14 ISBN 81 7735 374 8


வெளி இணைப்புகள்

  • எட்வின் அர்னால்ட் இயற்றிய Light of Asia — குட்டென்பர்க் திட்டத்தில் இலவச மின் நூல் e-text
  • புத்தரின் முதல் பேருரை



  • பா
  • பே
  • தொ
புத்தர்கள்
தேரவாத பௌத்தம்
கௌதம புத்தர் · 28 புத்தர்கள்
ஐந்து தியானி புத்தர்கள்
அமிதாப புத்தர் · வைரோசன புத்தர் · அக்சோப்ய புத்தர் · அமோகசித்தி புத்தர் · ரத்தினசம்பவ புத்தர்
மற்றவர்கள்
ஆதிபுத்தர் · மருத்துவ புத்தர் · நைராத்மியை · வஜ்ரதாரர்



  • பா
  • பே
  • தொ
பௌத்தம் தொடர்புடைய தலைப்புகள்
ஆளுமைக் கட்டுப்பாடு Edit this at Wikidata
  • பிப்சிசு: 90163677
  • பிஎன்ஈ: XX840627
  • பிஎன்எஃப்: cb11954606k (data)
  • CANTIC: a11154676
  • ஜிஎன்டி: 118664417
  • ஐஎஸ்என்ஐ: 0000 0001 2133 8551
  • எல்சிசிஎன்: n80050504
  • நாரா: 10582519
  • என்டிஎல்: 00571841
  • என்கேசி: jn20000700253
  • என்எல்ஏ: 35115590
  • என்எசுகே: 000014372
  • செலிபிரு: 288579
  • சுடோக்: 027524035
  • வயாஃப்: 77109647
  • WorldCat: 77109647


பிழை காட்டு: tags exist for a group named “note”, but no corresponding tag was found

பகுப்புகள்:
  • புத்தர்கள்
  • சமயத் தலைவர்கள்
  • தசவதார மூர்த்திகள்
  • சாதிய எதிர்ப்புச் செயற்பாட்டாளர்கள்
  • கௌதம புத்தர்
  • சமயங்களைத் தோற்றுவித்தோர்
  • பீகார் வரலாறு



வழிசெலுத்தல் பட்டி

  • புகுபதிகை செய்யப்படவில்லை
  • இந்த ஐபி க்கான பேச்சு
  • பங்களிப்புக்கள்
  • புதிய கணக்கை உருவாக்கவும்
  • உள்நுழை

  • கட்டுரை
  • உரையாடல்

  • படிக்கவும்
  • தொகு
  • வரலாற்றைக் காட்டவும்



  • முதற் பக்கம்
  • அண்மைய மாற்றங்கள்
  • உதவி கோருக
  • புதிய கட்டுரை எழுதுக
  • தேர்ந்தெடுத்த கட்டுரைகள்
  • ஏதாவது ஒரு கட்டுரை
  • தமிழில் எழுத
  • ஆலமரத்தடி
  • Embassy
  • சென்ற மாதப் புள்ளிவிவரம்
  • Traffic stats

உதவி

  • உதவி ஆவணங்கள்
  • Font help
  • புதுப்பயனர் உதவி

தமிழ் விக்கிமீடியா திட்டங்கள்

  • விக்சனரி
  • விக்கிசெய்திகள்
  • விக்கிமூலம்
  • விக்கிநூல்கள்
  • விக்கிமேற்கோள்
  • பொதுவகம்
  • விக்கித்தரவு

பிற

  • விக்கிப்பீடியர் வலைவாசல்
  • நன்கொடைகள்
  • நடப்பு நிகழ்வுகள்

கருவிப் பெட்டி

  • பகிர்க:
  • இப்பக்கத்தை இணைத்தவை
  • தொடர்பான மாற்றங்கள்
  • கோப்பைப் பதிவேற்று
  • சிறப்புப் பக்கங்கள்
  • நிலையான இணைப்பு
  • பக்கத் தகவல்
  • இக்கட்டுரையை மேற்கோள் காட்டு
  • குறுந்தொடுப்பு
  • விக்கித்தரவுஉருப்படி

அச்சு/ஏற்றுமதி

  • ஒரு புத்தகம் உருவாக்கு
  • PDF என தகவலிறக்கு
  • அச்சுக்குகந்த பதிப்பு

பிற திட்டங்களில்

  • விக்கிமீடியா பொதுவகம்
  • விக்கிமேற்கோள்



மற்ற மொழிகளில்


  • English
  • বাংলা
  • हिन्दी
  • ಕನ್ನಡ
  • മലയാളം
  • తెలుగు
  • اردو
  • मराठी
  • ગુજરાતી

இணைப்புக்களைத் தொகு

  • இப்பக்கத்தைக் கடைசியாக 26 சூன் 2020, 01:12 மணிக்குத் திருத்தினோம்.
  • அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.

  • http://www.bbc.co.uk/tamil/global/2013/11/131126_buddha_newfind.shtml

  • http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131126_buddha_birthplace_video.shtml

  • பக். 22, அத். 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399

  • பக்கம் 35, அத்தியாயம் 2, பௌத்தம் மிகச் சுருக்கமான அறிமுகம் - தாமியென் கோவ்ன். தமிழில் சி.மணி, 2005, அடையாளம் பதிப்பகம், தமிழ்நாடு 621310 ISBN 81 7720 0399

  • பகவன் புத்தர் வாழ்க்கை வரலாறு நூல் - மயிலை சீனி. வேங்கடசாமி

  • Rawlinson, Hugh George. (1950) A Concise History of the Indian People, Oxford University Press. p. 46.

  • Muller, F. Max. (2001) The Dhammapada And Sutta-nipata, Routledge (UK). p. xlvii. ISBN 0-7007-1548-7.

  • India: A History. Revised and Updated,
    by John Keay: “The date [of Buddha’s meeting with Bimbisara] (given the
    Buddhist ’short chronology’) must have been around 400 BCE.”

  • Smith 1924, பக். 34, 48.

  • Schumann 2003, பக். 1–5.

  • Carrithers 2001, பக். 3.

  • Buswell 2003, பக். 352.

  • Lopez 1995, பக். 16.

  • Cousins 1996, பக். 57–63.

  • Schumann 2003, பக். 10–13.

  • Bechert 1991–1997.

  • Ruegg 1999, பக். 82–87.

  • Narain 1993, பக். 187–201.

  • Prebish 2008, பக். 2.

  • Gombrich 1992.

  • Hartmann 1991.

  • Gombrich 2000.

  • Norman 1997, பக். 39.

  • Schumann 2003, பக். xv.

  • Wayman 1997, பக். 37–58.

  • Vergano, Dan (25 November 2013). “Oldest Buddhist Shrine Uncovered In Nepal May Push Back the Buddha’s Birth Date“. National Geographic. பார்த்த நாள் 26 November 2013.

  • Gombrich, Richard (2013), Recent discovery of “earliest Buddhist shrine” a sham?, Tricycle

  • Tan, Piya (21 December 2009), Ambaṭṭha Sutta. Theme: Religious arrogance versus spiritual openness (PDF), Dharma farer

  • Samuels 2010, பக். 140–52.

  • Gombrich 1988, பக். 49.

  • Warder 2000, பக். 45.

  • Walshe 1995, பக். 20.

  • Keown & Prebish 2013, பக். 436.

  • Nakamura 1980, பக். 18.

  • Srivastava 1979, பக். 61–74.

  • Srivastava 1980, பக். 108.

  • Tuladhar 2002, பக். 1–7.

  • Huntington 1986.

  • கௌதம புத்தரின் வாழ்க்கை



  • Leave a Reply